வாட்ஸ் ஆப் மூலம் கல்வி கற்க ஆர்வம் காட்டும் அங்கன்வாடி மைய குழந்தைகள்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலம் அங்கன்வாடி ஊழியர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலம் அங்கன்வாடி ஊழியர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முறை கல்வி கற்பித்தலை குழந்தைகள் ஆர்வத்துடன் பயின்று வருவதாக அங்கன்வாடி மைய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர்.

வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு அடிப்படைக் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணாமக மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலமாக குழந்தைகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி பயின்று வருவதால், பெற்றோர்களும் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது, என அங்கன்வாடி ஊழியகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர், மீனாட்சி கூறுகையில்:

‘‘குழந்தைகளுக்கு பாடம் கற்கும் பழக்கம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஊரடங்கால் குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அந்தந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை குழந்தைகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...