கோவையில் ரோபோக்கள் மூலம் பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யும் பணிகள் துவக்கம்..!

கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் மட்டும் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் மட்டும் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதால், அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய தேவையான கட்டமைப்புகளுடன் கூடிய லாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்த லாரிகளை பயன்படுத்தி, பாதாள சாக்கடையில் ஆள் இறங்க அமைக்கப்பட்ட ‘மேன் ஹோல்’ வழியாக அதிக அழுத்தம் கொடுத்து அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முதன் முதலாக கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கடந்த 17ம் தேதி ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தற்போது இந்த ரோபோக்கள் தங்களது பணிகளை கோவையில் துவங்கியுள்ளன.

கோவை மாநகரில் உள்ள பாதாள சாக்கடைகள் அதிகபட்சம் 26 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. இந்த ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி 30 அடி ஆழத்துக்கு கீழே உள்ள அடைப்புகளை கூட சரி செய்ய முடியும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:

ரோபோவை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் மேன்ஹோல் அருகே ரோபோ இயந்திரத்தை நிறுத்தி, அதனுடன் கை போல் இணைக்கப்பட்ட ஒயர் பகுதிகள் குழிக்குள் இறக்கப்படும். அந்த இயந்திரத்தின் மேல் பகுதியில் உள்ள திரை மூலம், குழிக்குள் அடைப்பு ஏற்பட்ட இடத்தை காணலாம். அதற்கேற்ப இயந்திரத்தை பயன்படுத்தி அடைப்புகளை சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம்.

மேலும், அடைப்பை ஏற்படுத்திய கழிவுகளை ரோபோ இயந்திரம் வெளியே கொண்டுவந்து விடும், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...