கோவை: பெரியாரை தனது முக நூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த ஹேர்லைன்ஸ் நந்தா என்பவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: பெரியாரை தனது முக நூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த ஹேர்லைன்ஸ் நந்தா என்பவர் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரியாரிஸ்டுகளுக்கும், இந்துத்துவ கொள்கை கொண்டவர்களுக்கும் இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து எழும் புகாரின் பேரில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டியை குறித்தும் அவதூறாகப் பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சண்முகநாதன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்த அமைப்பு நிர்வாகி மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியாரிஸ்டுகள் நேற்று அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் காலதாமதம் செய்ததாக, பெரியாரிஸ்டுகள் அன்னூர் காவல் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பகுதி கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஹேர் லைன்ஸ் நந்தா என்ற பெயரில் முகநூலில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டிருந்த அன்னூரைச் சேர்ந்த நந்தா என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a),505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, கந்த சஷ்டி குறித்து சமூக வளைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த பெரியாரியல் சிந்தனையாளர் மீதும், பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்டிருந்த இந்துத்துவ கொள்கையாளர் மீதும் ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரியாரிஸ்டுகளுக்கும், இந்துத்துவ கொள்கை கொண்டவர்களுக்கும் இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து எழும் புகாரின் பேரில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் கந்த சஷ்டியை குறித்தும் அவதூறாகப் பதிவிட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சண்முகநாதன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்த அமைப்பு நிர்வாகி மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியாரிஸ்டுகள் நேற்று அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் காலதாமதம் செய்ததாக, பெரியாரிஸ்டுகள் அன்னூர் காவல் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அன்னூர் பகுதி கிளைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் ஹேர் லைன்ஸ் நந்தா என்ற பெயரில் முகநூலில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டிருந்த அன்னூரைச் சேர்ந்த நந்தா என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a),505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, கந்த சஷ்டி குறித்து சமூக வளைதளத்தில் அவதூறாக பதிவிட்டிருந்த பெரியாரியல் சிந்தனையாளர் மீதும், பெரியார் குறித்து அவதூறாகப் பதிவிட்டிருந்த இந்துத்துவ கொள்கையாளர் மீதும் ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.