திருப்பூரில் 2 ஆண் குழந்தைகள் உட்பட 34 பேருக்கு இன்று கொரோனா உறுதி; 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருப்பூர்: திருப்பூரில் 2 ஆண் குழந்தைகள் உட்பட இன்று 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் 2 ஆண் குழந்தைகள் உட்பட இன்று 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று அவினாசி கஸ்தூரிபாய் நகரில் 7 வயது ஆண் குழந்தை, திருப்பூர் வைகால்மேடு அமராவதி நகரில் 6 வயதான ஆண் குழந்தை, திருப்பூர் ஏவிபி லே அவுட்டில் 3 பேர், கடைவீதி புது பாயில் பகுதியில் 3 பேர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூக இடைவெளி மற்றும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு வகைகளில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூரில் இன்று புதிதாக 102 பேர் உட்பட 2823 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதோடு, இன்று மட்டும் 862 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், 270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறிய 613 பேரிடம் ரூ.69,600 அபராத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...