கோவை: கொரோனா தொற்றால் தமிழக அரசு சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன், தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனா தொற்றால் தமிழக அரசு சந்தித்து வரும் நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன், தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையத்தில் 35 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 4 ஏக்கர் பரப்பளவில் 512 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணியை, இன்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்:
தமிழகத்தில் மின்சார கட்டணம் எப்போதும் போல் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், நிதி வசூல் இல்லாமல் பொருளாதாரம் சூழ்நிலை மந்தம் ஏற்பட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்து வருகிறார்.
இது போன்ற அசாதாரணமான சூழலில் கூட தமிழக அரசு நிதி பற்றாக்குறையை நிதானமாக கையாண்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் அடர்த்தியான மக்கள் தொகை இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல், கட்டுக்குள் தான் இருக்கிறது.
முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் பொது சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது,
கொரோனா தோற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாகவே புதிய மாவட்டங்களை உருவாக்குவது நிறுத்திவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன் தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையத்தில் 35 கோடி மதிப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 4 ஏக்கர் பரப்பளவில் 512 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணியை, இன்று சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்:
தமிழகத்தில் மின்சார கட்டணம் எப்போதும் போல் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், நிதி வசூல் இல்லாமல் பொருளாதாரம் சூழ்நிலை மந்தம் ஏற்பட்டு அரசுக்கு சிக்கல் ஏற்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்து வருகிறார்.
இது போன்ற அசாதாரணமான சூழலில் கூட தமிழக அரசு நிதி பற்றாக்குறையை நிதானமாக கையாண்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் அடர்த்தியான மக்கள் தொகை இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல், கட்டுக்குள் தான் இருக்கிறது.
முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் பொது சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது,
கொரோனா தோற்று மற்றும் ஊரடங்கு போன்றவற்றால் தமிழக அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாகவே புதிய மாவட்டங்களை உருவாக்குவது நிறுத்திவைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நிதி பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்பட்ட உடன் தமிழக முதல்வருடன் பேசி பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.