கொரோனா தடுப்பு நடவடிக்கை: பவானி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை!

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆடி அமாவாசைக்காக முன்னோர்களுக்கு திதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆடி அமாவாசைக்காக முன்னோர்களுக்கு திதி கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனம் என்ற இடம் காசிக்கு நிகராக கருதப்படுவதால் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். 

குறிப்பாக ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மற்றும் மேட்டுப்பாளையம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் என ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க இங்கு வருகின்றனர்.

இந்நிலையில், அடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் தொடர்ந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுத்து வழிபட்டு வந்தனர். 

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நந்தவனத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அரசங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

இதனால் ஆடி அமாவாசையான இன்று கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இங்கு தர்ப்பணம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக அறவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு நந்தவன வளாகம் மூடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...