கூடலூரில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம்: வனத்துறையினர் தீவிர விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.

"கூடலூர் சுற்றியுள்ளப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், சமீபகாலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் காய்கறி செடிகளை நாசம் செய்வது அதிகரித்துள்ளது" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க பலமுறை வனத்துறையினர் முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது, என கவலை தெரிவித்தனர்.



இந்த நிலையில், கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் யானை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

உணவை தேடி வரும் போது, அந்த யானை சேற்றில் சிக்கியதா? இல்லை காட்டு யானைகலுக்குள் சண்டை ஏற்பட்டு, தப்பி ஓடி வரும் போது தவறி சேற்றில் சிக்கி இருக்குமோ? என்ற கோணத்தில் கூடலூர் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...