நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கிய ஆண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்காெண்டு வருகின்றனர்.
"கூடலூர் சுற்றியுள்ளப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், சமீபகாலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் காய்கறி செடிகளை நாசம் செய்வது அதிகரித்துள்ளது" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க பலமுறை வனத்துறையினர் முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது, என கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் யானை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
உணவை தேடி வரும் போது, அந்த யானை சேற்றில் சிக்கியதா? இல்லை காட்டு யானைகலுக்குள் சண்டை ஏற்பட்டு, தப்பி ஓடி வரும் போது தவறி சேற்றில் சிக்கி இருக்குமோ? என்ற கோணத்தில் கூடலூர் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"கூடலூர் சுற்றியுள்ளப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், சமீபகாலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் காய்கறி செடிகளை நாசம் செய்வது அதிகரித்துள்ளது" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகாமல் இருக்க பலமுறை வனத்துறையினர் முயற்சித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது, என கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சேற்றில் யானை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் வருவதற்குள் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
உணவை தேடி வரும் போது, அந்த யானை சேற்றில் சிக்கியதா? இல்லை காட்டு யானைகலுக்குள் சண்டை ஏற்பட்டு, தப்பி ஓடி வரும் போது தவறி சேற்றில் சிக்கி இருக்குமோ? என்ற கோணத்தில் கூடலூர் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.