கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பால் கம்பெனியால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பால் கம்பெனியால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் தனியார் மாட்டுப்பால் கம்பெனி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்குவதால் கொசு, மற்றும் விஷ ஜந்துக்கள் உற்பத்தியாவதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் குரும்பபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், பல்வேறு துறை அரசு அதிகாரிகள், சார்- ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் தனியார் மாட்டுப்பால் கம்பெனி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்குவதால் கொசு, மற்றும் விஷ ஜந்துக்கள் உற்பத்தியாவதுடன் கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படுவதாக அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் குரும்பபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், பல்வேறு துறை அரசு அதிகாரிகள், சார்- ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.