பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள்: கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் மூன்றாவது இடம்
கோவை: தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் துவங்கி 24-ந் தேதி வரை நடந்தது.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ். குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 286 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
தனித் தேர்வாளர்களாக 632 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 909 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.
பிளஸ்-2 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
அதில் கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது. முதல் இடத்தை திருப்பூர் மாவட்டமும், 2-வது இடத்தை ஈரோடு மாவட்டமும் பிடித்தது.
கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ். குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 286 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
தனித் தேர்வாளர்களாக 632 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 909 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.
பிளஸ்-2 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
அதில் கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது. முதல் இடத்தை திருப்பூர் மாவட்டமும், 2-வது இடத்தை ஈரோடு மாவட்டமும் பிடித்தது.