திருப்பூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முகக்கவசம் அணிந்து விலையில்லா பாடப்புத்தகங்களை வாங்கி சென்ற மாணவர்கள்!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் முலனூர் அலங்கியம் பகுதியில் வழங்கப்பட்டது.

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் முலனூர் அலங்கியம் பகுதியில் வழங்கப்பட்டது. 

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் முதல் நாளன்றே பாடப்புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. அதன்படி 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ஏற்கெனவே அனைத்து பள்ளிகளையும் சென்றடைந்து விட்டன.

இந்நிலையில், முதல்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதனையொட்டி, பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.



மேலும், பாடப் புத்தகங்கள் வாங்கவரும் மாணவர்களும், பெற்றோரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்து, தங்களது பெற்றோர்களுடன் வந்து பாட புத்தகங்களை வாங்கி சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...