கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 7ம் தேதி கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் முதல் நிலை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது.