கோவை: கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1000 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1000 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-
பிரதமர் மோடி சுய சார்பு பாரதம் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் தொழில்நுட்பம், டெமோகிராபி பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு என்பன உள்ளிட்ட ஐந்து வகையான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மொத்தமாக 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி என பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் வசித்த வீடு மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்.டி, எஸ்.சி பிரிவு மாணவர்கள் படிப்புக்காக செல்லும் போது அந்த வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, இந்தியாவில் 52 சதவீதம் உள்ள ஒ பி சி. பிரிவினர்களுக்காக 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.37 லட்சம் இலவச கேஸ் இணைப்பு பெண்களுக்கு தரப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்திற்கு ரூ1000 கோடி நிதி உதவி தொழில் நிறுவனங்களுக்கும், சிறு,குறு தொழில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டத்தை பா.ஜ.க அரசு என்றும் ரத்து செய்யாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் ஆர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரமேஷ்குமார், தாமு, செய்தி தொடர்பாளர் சபரி, துணைத்தலைவர் மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-
பிரதமர் மோடி சுய சார்பு பாரதம் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் தொழில்நுட்பம், டெமோகிராபி பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு என்பன உள்ளிட்ட ஐந்து வகையான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மொத்தமாக 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி என பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் வசித்த வீடு மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்.டி, எஸ்.சி பிரிவு மாணவர்கள் படிப்புக்காக செல்லும் போது அந்த வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, இந்தியாவில் 52 சதவீதம் உள்ள ஒ பி சி. பிரிவினர்களுக்காக 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.37 லட்சம் இலவச கேஸ் இணைப்பு பெண்களுக்கு தரப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்திற்கு ரூ1000 கோடி நிதி உதவி தொழில் நிறுவனங்களுக்கும், சிறு,குறு தொழில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டத்தை பா.ஜ.க அரசு என்றும் ரத்து செய்யாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் ஆர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரமேஷ்குமார், தாமு, செய்தி தொடர்பாளர் சபரி, துணைத்தலைவர் மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.