கோவை: கோவை அடுத்த சூலூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத 7 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோவை அடுத்த சூலூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத 7 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கப்படுவதாலும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பல இடங்களில் அதிகளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சில தளர்வுகளுடன் கடைகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில், கோவையை அடுத்த சூலூர் பகுதியில் இயங்கி வந்த ஆவின் பாலகங்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்படுதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் செந்தில் தலைமையில் சூலூர் பகுதியில் இயங்கி வரும் ஆவின் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அரசு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கிய ஏழு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கப்படுவதாலும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பல இடங்களில் அதிகளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சில தளர்வுகளுடன் கடைகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இந்நிலையில், கோவையை அடுத்த சூலூர் பகுதியில் இயங்கி வந்த ஆவின் பாலகங்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்படுதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் செந்தில் தலைமையில் சூலூர் பகுதியில் இயங்கி வரும் ஆவின் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அரசு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கிய ஏழு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.