வாளையார் சோதனை சாவடி அருகே முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.46 லட்சம் பணம் பறிமுதல் - இருவரிடம் போலீசார் விசாரணை

கோவை: தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடி அருகே முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (42) மற்றும் கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருக குருசாமி. இந்நிலையில், வாளையார் சோதனை சாவடி அருகே கேரள போதை தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சம்பத்குமார் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தின் சீட்டின் அடியில் 16 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம், பாலமுருக குருசாமியின் வாகனத்தை சோதனையிட்ட போது, பணம் எதுவும் சிக்கவில்லை.

ஆனால், சந்தேகமடைந்த போலீசார் அவரது சட்டை வித்தியாசமாக இருப்பதை கண்டு, அவரை சோதனை செய்தபோது சட்டையில் பல்வேறு பாக்கெட்டுகள் அமைத்து அதில் 30 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, டிராக்டர் வாங்க திருச்சூர் செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் இல்லாததால் கேரள போதை தடுப்பு போலீசார் இவர்கள் இருவரையும் வாளையார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர்கள் கட்டுகட்டாக வைத்திருந்த பணத்தை பறிமுதல் போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி வாளையார் சோதனை சாவடியில் 1.25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில் 46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தமிழக கேரள எல்லையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...