கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் தான் உள்ளனரா என வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் தான் உள்ளனரா என வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1185 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, இவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வாஸ்ட் ஆப் மூலம் வீடியோ கால் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்த பின்னர், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நல்ல பயன் அளிக்கிறது, என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 31 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1185 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, இவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வாஸ்ட் ஆப் மூலம் வீடியோ கால் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வீடியோ கால் மூலம் பேசி மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்த பின்னர், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நல்ல பயன் அளிக்கிறது, என தெரிவித்தார்.