கோவை: கோவை சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சூலூர் ரங்கநாதபுரம் நெய்தல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ (57). சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கலங்கலில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லஸ், செயின், மோதிரம், கம்மல் என 12 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்தில் ராஜூ அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருடு போன பகுதியில் சி.சி.டி.வி கேமரா எதுவும் இல்லாத காரணமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மேலும், கைரேகை நிபுணர் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகைகள் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் திருடு போன சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சூலூர் ரங்கநாதபுரம் நெய்தல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ (57). சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கலங்கலில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லஸ், செயின், மோதிரம், கம்மல் என 12 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்தில் ராஜூ அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருடு போன பகுதியில் சி.சி.டி.வி கேமரா எதுவும் இல்லாத காரணமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மேலும், கைரேகை நிபுணர் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகைகள் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதியில் திருடு போன சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.