கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக தொடர்ந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புள்ள
பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் சோதனைச்சாவடி அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று, ஜூலை 7 ஆம் தேதி, ரூ 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் பவன்ராஜ்:
பொள்ளாச்சி உட்பட கீழ் பகுதியில் இருந்து வருபவர்கள், வால்பாறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவையிருப்பின் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் அவசியம் பெற்று மட்டுமே வர அனுமதிக்கப்படுவர்.
அதேபோல, வால்பாறையிலிருந்து கீழ் பகுதிக்கு செல்பவர்களும் திரும்பி வரும் போது கொரோனா சான்றிதழ் கட்டாயம் பெற்றிக்க வேண்டும் என்றார்.
மேலும், ரொட்டிக்கடை புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம்
கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வால்பாறை நகராட்சி ஆணையர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, பொறியாளர் சரவணபாபு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தொழிற்சங்கத் தலைவர் வீ அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், நகராட்சி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக தொடர்ந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புள்ள
பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் சோதனைச்சாவடி அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று, ஜூலை 7 ஆம் தேதி, ரூ 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் பவன்ராஜ்:
பொள்ளாச்சி உட்பட கீழ் பகுதியில் இருந்து வருபவர்கள், வால்பாறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவையிருப்பின் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் அவசியம் பெற்று மட்டுமே வர அனுமதிக்கப்படுவர்.
அதேபோல, வால்பாறையிலிருந்து கீழ் பகுதிக்கு செல்பவர்களும் திரும்பி வரும் போது கொரோனா சான்றிதழ் கட்டாயம் பெற்றிக்க வேண்டும் என்றார்.
மேலும், ரொட்டிக்கடை புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம்
கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வால்பாறை நகராட்சி ஆணையர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, பொறியாளர் சரவணபாபு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தொழிற்சங்கத் தலைவர் வீ அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், நகராட்சி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.