கோவை: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சூலூர் விரைவு நீதிமன்றம் மற்றும் NO:2 விரைவு நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சூலூர் விரைவு நீதிமன்றம் மற்றும் NO:2 விரைவு நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று நீதிபதி மூன்று பேர் உட்பட ஊழியர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றதில் ஒருவருக்கு கொரோனோ தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, கோவை நீதிமன்ற (No:2) நீதியரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதி மன்றம் (No:2) இன்று, ஜூலை 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஐந்து நாட்கள் வழக்கறிஞர்கள் மிக முக்கியமான வழக்குகளை மட்டும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, கோவை மற்றும் சூலூர் நீதிமன்ற வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 யத்தை தாண்டியுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று நீதிபதி மூன்று பேர் உட்பட ஊழியர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றதில் ஒருவருக்கு கொரோனோ தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, கோவை நீதிமன்ற (No:2) நீதியரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதி மன்றம் (No:2) இன்று, ஜூலை 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஐந்து நாட்கள் வழக்கறிஞர்கள் மிக முக்கியமான வழக்குகளை மட்டும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, கோவை மற்றும் சூலூர் நீதிமன்ற வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 யத்தை தாண்டியுள்ளது.