கோவையில் மின்சாரம் தாக்கி உயிரிந்த மயிலுக்கு தேசியக்கொடி போற்றி மரியாதை செலுத்திய சிங்காநல்லூர் போலீசார்

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலின் உடலுக்கு போலீசார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலின் உடலுக்கு போலீசார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நடைபெறும் உயிரிழப்புகளில் பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இப்படி தன்னுடன் வாழும் மனிதருக்கே மதிப்பளிக்காத இந்த சூழலில் கோவையில் இறந்த தேசிய பறவையான மயிலின் உடலுக்கு தேசியக் கொடியை போற்றி மரியாதை செலுத்திய காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் இன்று காலை உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரத்தால் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க மயில் ஒன்று கருகி சம்பவ இடத்திலேயே பலியானது.

இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள், ஆத்மா அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்த சரவணன், சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் சுகுமாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பியில் மாட்டியிருந்த மையிலின் உடலை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து காவலர் சுகுமார் தேசிய பறவையான மயிலின் இறந்த உடலுக்கு தேசியக்கொடியை போற்றி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மயிலின் உடல் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜுன் மேற்பார்வையில் மதுக்கரை வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...