கோவை: கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை: கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதனால் அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. அங்கு காலியாக இருந்த 1300க்கும் மேற்பட்ட வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் அப்பகுதியில் வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடிக்கப்பட்ட வீடுகளின் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் கட்டிட கழிவுகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டிட கழிவுகள் அகற்றப்படும், என தெரிவித்தார்.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதனால் அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. அங்கு காலியாக இருந்த 1300க்கும் மேற்பட்ட வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் அப்பகுதியில் வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடிக்கப்பட்ட வீடுகளின் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் கட்டிட கழிவுகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டிட கழிவுகள் அகற்றப்படும், என தெரிவித்தார்.