கோவை: கோவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(34). இவரது தந்தை முத்துசாமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காலமானார். இதனால் ரமேஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் அவரது இளைய சகோதரர் கோபால கிருஷ்ணன் தனது நண்பர் பிரபாகரனுடன் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றவர், வீட்டின் கதவை தட்டி உள்ளார். வெகு நேரமாக கதவை திறக்காததால் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது ரமேஷ்குமார் சேலை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இதனையடுத்து, அவரை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரமேஷ்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.