கோவையில் பணம் பறிக்க முயன்றவர்களிடம் போராடிய இளைஞருக்கு கத்தி குத்து! குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

கோவை: கோவையில் பணம் பறிக்க முயன்றவர்களிடம் போராடிய இளைஞருக்கு கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


கோவை: கோவையில் பணம் பறிக்க முயன்றவர்களிடம் போராடிய இளைஞருக்கு கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோவை பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த அபுபக்கரின் மகன் சேக் அலாவுதீன் (18). இவர் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் தனது வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவனுடன் குறிச்சி குடியிருப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

அப்போது, இரு வாகனங்களில் வந்த நான்கு பேர் சேக் அலுவதீனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் அந்த மர்ம நபர்களுடன் போராடி உள்ளார்.

இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்து இருந்த கத்தியால் சேக் அலாவுதீனை தலை, கழுத்து மற்றும் இடது மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதனை தொடர்ந்து, பலத்த காயம் அடைந்த சேக் அலாவுதீன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...