தெற்கு ரயில்வேயில் 13 வழித்தடங்களில் தனியார் நவீன ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம்‌ அழைப்பு!

நாடு முழுவதும்‌ 109 வழித்தடங்களில்‌, 151 நவீன ரயில்களை இயக்க, தனியாருக்கு, ரயில்வே அமைச்சகம்‌ அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும்‌ 109 வழித்தடங்களில்‌, 151 நவீன ரயில்களை இயக்க, தனியாருக்கு, ரயில்வே அமைச்சகம்‌ அழைப்பு விடுத்துள்ளது. 

பயணியர்‌ ரயில்‌ போக்குவரத்தில்‌, ஆண்டுக்கு, 40 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ இழப்பு ஏற்படுவதால்‌, தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

தனியார்‌ துறை முதலீட்டால்‌, ஆண்டுக்கு, 30 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ வருவாய்‌ கிடைப்பதுடன்‌, கூடுதல்‌ வேலை வாய்ப்புகள்‌ உருவாகும்‌ என, ரயில்வே அமைச்சகம்‌ தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில்‌, தெற்கு ரயில்வேயில்‌, தமிழகம்‌, கேரளா மற்றும்‌ ஆந்திராவில்‌, 13 வழித்தடங்களில்‌, 26 ரயில்கள்‌ இயக்க அனுமதிக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை, இரு வழிகளில்‌ தினமும்‌ இயக்கவும்‌, வாரத்தில்‌, ஒரு நாள்‌, இரண்டு நாள்‌ மற்றும்‌ மூன்று நாட்கள்‌ இயக்கவும்‌ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ரயில்கள்‌ விபரம்‌:

சென்னை - மதுரை

புதுச்சேரி - செகந்திராபாத்‌ (வழி சென்னை)

சென்னை - கோவை

திருநெல்வேலி - கோவை

திருநெல்வேலி - சென்னை

திருச்சி - சென்னை

கன்னியாகுமரி - சென்னை

கன்னியா குமரி - எர்ணாகுளம்‌

சென்னை - புதுடில்லி

சென்னை - ஹவுரா

மேற்கொண்ட ரயில்களை, இரு வழியிலும்‌ தினசரி ரயில்‌ இயக்க தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ மங்களூர்‌ - சென்னை வாராந்திர ரயில்‌, சென்னை - மும்பைக்கு வாரம்‌ இருமுறை, கொச்சுவேலி - கவுஹாத்தி இடையே வாரத்தில்‌ மூன்று நாட்கள்‌ என, 13 வழித்தடங்களில்‌ ரயில்கள்‌ இயக்க, ரயில்வே அமைச்சகத்தால்‌ அனுமதி அளிக்கப்பட உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...