சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் மரணம்..! நோய் தொற்று காரணமா?

கோவை: சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் இறப்பு, வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் இறப்பு, வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியானது தமிழக கர்நாடகா வனப்பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எறுமை போன்ற ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.

குறிப்பாக யானைகள் தமிழகம், கர்நாடகா, கேரளா என ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநில காடுகளுக்கு வலசை செல்ல சிறுமுகை காடுகளை கடந்தே செல்ல முடியும். இதனால் சிறுமுகை வனத்தில் எப்போதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் யானைகளின் உயிரிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

முதலில் நோய் தாக்கத்திற்கு ஆளாகும் யானைகள், பின்னர் இறப்பது என்பது அதிகரித்து கொண்டே செல்வதால், அதற்கான தீர்வு காண போராடி வருகின்றனர், வனத்துறையினர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் நோய்வாய்பட்டு உடல் மெலிந்து அடுத்தடுத்து இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இதேபோல் உடல்சோர்வு ஏற்பட்டு படுத்து கிடந்த யானைக்கு தற்போது வரை வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக சிறுமுகை வனச்சரக பகுதியான லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்த ஒரு பெண் யானை, இன்று லிங்காபுரம் பகுதியில் காந்தையாறு பகுதியில் உயிரிழந்து கிடந்தது.



இப்படி, யானைகளின் அடுத்தடுத்த உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தெரியாமல் வனத்துறை தினறும் நிலையில் யானைகளின் இழப்பால் பெரும் அளவில் வனச்சூழல் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள, வன ஆர்வலர்கள் சிறுமுகை வனப்பகுதியில் வன உயிரினங்களுக்கு ஏதேனும் தொற்று பரவல் உள்ளதா என கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...