திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் மதுபான கடைகள்; சமூக இடைவெளியும் இல்லாததால் கொரோனா பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் மதுபான கடைகள் அரசு அனுமதியில்லாமல் இயங்குவதோடு சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றாத காரணத்தினால், கொரோனா பரவும் அச்சத்தில் பொதுமக்கள் வாழந்துவருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் மதுபான கடைகள் அரசு அனுமதியில்லாமல் இயங்குவதோடு சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றாத காரணத்தினால், கொரோனா பரவும் அச்சத்தில் பொதுமக்கள் வாழந்துவருகின்றனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் மதுபான கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான கடைகள் செயல்படக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாறாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டுவருகின்றனர். குறிப்பாக இதில் பல கடைகள் அரசின் அனுமதியில்லாமலும் இயங்கிவருகிறது.



மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் குடிமகன்கள் மதுபான கூடத்தில் கூடுகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மதுபான கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அதிலும் பழைய பேருந்து நிலையம் தாராபுரம் சாலை கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பூரில் கொரோனாவின் பாதிப்பு 120 ஆக இருந்த நிலையில் தற்போது 200 ஐ நெருங்கி வருகின்றது. எனவே இது போன்ற மதுபான கடைகளில் குடிமக்கள் அதிகம் கூடுவதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...