நீலகிரி: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 107 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 39 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் உதகை அரசு மருத்துவமனையிலும் 24 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டம் கீரின்பீல்டு பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவருக்கு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது உயிரிழப்பின் காரணமாக கிரீன் பீல்டு பகுதியில் சுகாதாரத்துறையினர் மேலும் சுகாதாரப் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 107 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 39 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் உதகை அரசு மருத்துவமனையிலும் 24 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டம் கீரின்பீல்டு பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவருக்கு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது உயிரிழப்பின் காரணமாக கிரீன் பீல்டு பகுதியில் சுகாதாரத்துறையினர் மேலும் சுகாதாரப் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.