மேட்டுப்பாளையத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்த காட்டுயானை மர்மமான முறையில் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

கோவை: மேட்டுப்பாளையத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்த காட்டுயானை காதில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்த காட்டுயானை காதில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் அவ்வப்போது மலை அடிவார விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்து வந்தது. 

இந்த நிலையில், இன்று வனத்தை விட்டு வெளியே வந்த பெண் காட்டு யானை ஒன்று தேக்கம்பட்டி அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீரினை தேடி வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. 

பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் இறந்துள்ள பெண் காட்டு யானைக்கு காதில் ரத்தம் வழிந்தபடி உள்ளதால் யானை இயற்கையாக உயிரிழந்ததற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மர்மநபர்களால் யானை தாக்குதலுக்கு உள்ளானதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனையடுத்து, கோவையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. பரிசோதனைக்கு பின்னரே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...