கோவை மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் பலி! பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவையில் மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவையில் மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 



கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதி கேரள மாநிலம் வாளையாறு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்புகள் குறைவாக உள்ள நிலையில் மலையடிவாரத்திலுள்ள தோட்டங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும்.

இந்நிலையில், மதுக்கரை விநாயகர் கோவில் பகுதியில் மொய்தீன் என்பவர் வீட்டில் உள்ள ஆட்டுப் பட்டியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது. மேலும் இரண்டு ஆடுகளையும் கடித்ததில் அந்த ஆடுகள் காயத்துடன் உயிர் தப்பியது. ஆடுகளின் அலறல் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை நின்றிருப்பதைக் கண்டு சத்தம் எழுப்பியதை தொடர்ந்து சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

இதனையடுத்து, மதுக்கரை வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...