கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் கடையை திறந்து வியாபாரம் செய்த கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் கடையை திறந்து வியாபாரம் செய்த கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கொரோனோ ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கடையில் வியாபாரம் செய்வதாக கூறி கடந்த 24ம் தேதி தெற்கு வட்டாட்சியர் கடைக்கு சீல் வைத்தார். 

இந்நிலையில், கடையின் உரிமையாளர் கணேஷ் கடையின் பூட்டை திறந்து தொடர்ந்து வியாபாரம் செய்து வந்ததாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட கடையை திறந்து வியாபாரம் செய்வதை உறுதி செய்தனர். 

மேலும், ஏற்கனவே அந்த கடையில் ஊழியர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் அப்பகுதியில் 21 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கோவை கிழக்கு மண்டல மாநகராட்சி ஆணையாளர் செல்வம் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் அப்பகுதியே தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் செல்வம் புகாரின் பேரில் பீளமேடு போலீசார் துணிக் கடை உரிமையாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...