திருப்பூர்: திருப்பூரில் காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டி மீது கார் மோதி நிற்காமல் சென்ற சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட தள்ளு வண்டியின் வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் காய்கறிகள் விற்பனை செய்யும் தள்ளு வண்டி மீது கார் மோதி நிற்காமல் சென்ற சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட தள்ளு வண்டியின் வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் திலிப்சர்மா (39). திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்திற்கு பியூசிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பியூசிங் வேலை இல்லாத நிலையில் அருகில் உள்ள சந்தையில் சென்று தேங்காய் மற்றும் காய்கறிகள் மொத்தமாக வாங்கி வீடு வீடாக சென்று விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று கொங்கு மெயின் ரோடு எஸ்.வி.காலணி பகுதிக்கு காய்கறிகள் விற்பனைக்குச் சென்ற போது, எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளது.
பின்னர் அங்கிருந்த மக்கள் திலிப்சர்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் இந்த விபத்து நடந்த போது பதிவான சி.சி.டிவி காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.