கோவை: கோவை மாநகராட்சி 21வது வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன் குளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து வாழும் சில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பட்டா வழங்கக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி 21வது வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன் குளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து வாழும் சில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பட்டா வழங்கக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :-
கோவை மாநகராட்சி 21 வார்டு குமாரசாமி காலனி முத்தண்ணன் குளம் ஏரிக்கு வெளியில் நீர் வழித்தடத்தை ஆக்கிரமிக்காமல் 100 ஆண்டுகளாக அப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றன.
30 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நிலத்திற்கான அனுபவப் பாத்தியம் உள்ளது. அந்த வகையில் 100 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூர்வகுடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு சட்டத்தின் படி வசிப்பிடத்தில் பட்டா வழங்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இந்த பூர்வகுடி மக்களை அங்கிருந்து வெளியேற்றாமல் இப்பகுதியிலேயே வாழும் மக்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.