பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.
தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
பிரதமரின் உரை நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து தமது உரையில் மோடி குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய 5வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்தும் பிரதமர் விளக்குவார் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.
தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
பிரதமரின் உரை நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. கொரோனா தடுப்புப் பணிகள், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து தமது உரையில் மோடி குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய 5வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட தளர்வுகள் குறித்தும் பிரதமர் விளக்குவார் என்று கூறப்படுகிறது.