கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 3,949 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 2,212 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 47,749 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 1,141 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கோவையில் இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நீலகிரியில் புதிதாக 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, திருப்பூர் புதிதாக 10 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.