கோவை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் சென்றால் மக்கள் எளிதாக விவசாயம் மற்றும் நகைக்கடன் வாங்க முடியாது என்றார். மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதாகவும் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் என கூறிய அவர், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதை கைவிட வேண்டும் என தெரிவித்தார்.