திருப்பூரில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கான திட்டங்களை விவசாயிகளின் நிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நில அளவீடு செய்து நிலங்களுக்கான இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது மின் கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பூமலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் வழியாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாதிக்கப்படும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோவை மாவட்டத்தில் பின்பற்றிவரும் கணக்கீட்டு முறையை பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்தில் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒட்டுமொத்த முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என வற்புறுத்தினர். இதையடுத்து, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...