கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.2 துடியலூர் விஸ்வநாதபுரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன், மாநகராட்சி துணைஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.2 துடியலூர் விஸ்வநாதபுரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன், மாநகராட்சி துணைஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, உக்கடம் பகுதியில் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கிய தனியார் பேருந்தினை மாநகராட்சி பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மத்திய மண்டல உதவி ஆணையர் தலைமையில் உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதிகளில் இயங்கிவரும் கடைகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஒலிபெருக்கி வாயிலாக அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியினை பின்பற்றுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடனுள்ளார்கள்.