கோவை: தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3,940 பேர் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 1,443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 1,079 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, மட்டும் 31,505 பேர் பரிசோதனைை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,992பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, கோவையில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நீலகிரியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, திருப்பூர் புதிதாக 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.