திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு 117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில தினங்களாக திருப்பூரில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்று வந்தவர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவர், தொழில் நிமித்தமாக மதுரை சென்று வந்த நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, கொரோனா தொற்று சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, முதியவர் இருந்த பகுதியிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் அருகில் இருந்த பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 2,771 பேர் தனிமைபடுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த முதியவர் வசித்த அங்கேரிபாளையம் பகுதியில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு 117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில தினங்களாக திருப்பூரில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்று வந்தவர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவர், தொழில் நிமித்தமாக மதுரை சென்று வந்த நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, கொரோனா தொற்று சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, முதியவர் இருந்த பகுதியிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் அருகில் இருந்த பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 2,771 பேர் தனிமைபடுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த முதியவர் வசித்த அங்கேரிபாளையம் பகுதியில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.