கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே 6 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி..! எந்த வீட்டிலும் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்!

கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் அங்கு பூட்டி இருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் அங்கு பூட்டி இருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு தென்றல் நகரில் 3 வீதிகள் உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரது வீடுகள் உள்ள நிலையில், சிலர் இதனை கெஸ்ட் ஹவுசாக உபயோகித்து வருகின்றனர்.



கொரோனா தொற்று காரணமாக கோவையில் இருந்து பலர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் தென்றல் நகர் 3-வது வீதியில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் முரளிதரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் பீரோவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து, தென்றல் நகர் 1-வது வீதியில் உள்ள ஊட்டி விவசாயி லிங்கராஜ், சுகுமாரன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த முருகேஷ், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கோபிகண்ணன் ஆகியோரது வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வீடுகளின் உரிமையாளர்கள் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.



அதேசமயம், திருட வந்த நபர்களுக்கு எந்த வீட்டிலும் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் மட்டும் ரூ.500 பணத்தை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயலவே திருடர்கள் இருவரும் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்து தப்பி விட்டனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, 2 நபர்கள் கையில் அரிவாளுடன் சுற்றி வருவது பதிவாகி உள்ளது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...