கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த பிறந்து 45 நாட்களான பெண் குழந்தைக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை இன்று செய்யப்பட்டது.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த பிறந்து 45 நாட்களான பெண் குழந்தைக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை இன்று செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி கோவையில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று வெற்றிகரமாக குடல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி கோவையில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று வெற்றிகரமாக குடல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.