காரமடையில் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரானோ தொற்று உறுதி..! தனியார் மருத்துவமனை மூடப்பட்டது!

கோவை: காரமடையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரானோ தொற்று உறுதியானதால் அந்த மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டது.

கோவை: காரமடையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரானோ தொற்று உறுதியானதால் அந்த மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் செளமியா கிளீனிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதே பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக வந்த நிலையில் அவருக்கு கொரானோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அந்த பெண்ணிற்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை இருந்த மற்ற நோயாளிகள் அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.



மேலும், தீயணைப்புத்துறை வாகனம் மூலம் சுகாதாரத்துறை மற்றும் சிக்காரம்பாளையம் ஊராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல, கொரானோ தொற்று பாதித்த அந்த பெண் வசித்த பகுதிக்கு சீல் வைத்துள்ள நிலையில், அங்கும் சுகாதார பணிகள் முடுக்கிவிடபட்டுள்ளன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...