சாத்தான்குளத்தில் சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி - தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி வழங்கினார்!

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

சாத்தான்குளத்தில் கணவன் - மகன் என இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணிக்கு தி.மு.கழகத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.



மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் கொடுத்தார். அப்போது, செல்போனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும் எனவும் சட்ட வடிவிலான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

லாக்அப் மரணத்தில் இந்தியாவில் தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தண்டனை கிடைத்தது கிடையாது எனவும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றார்.

மேலும், இது குறித்து மத்திய மனித உரிமை ஆணையத்திற்கு தான் இன்று கடிதம் எழுதியுள்ளதாக கூறிய எம்பி கனிமொழி, இந்த சம்பவத்தை கொலையாக கருதி இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...