கோவையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சென்றதால் பரபரப்பு! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவைப்புதூர் பகுதியில் வசித்து வரும் முத்துச்சாமி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முத்துசாமி வீட்டின் மீது இரண்டு பாட்டில்களை வீசி சென்றுள்ளனர். இன்று காலையில் முத்துசாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த பொழுது கார் அருகே வீசப்பட்ட ஒரு மதுபாட்டில் உடைந்திருப்பதும் மற்றொரு மதுபாட்டில் உடையாமல் வளாகத்தில் இருப்பதை பார்த்து உள்ளார்.

இதுகுறித்து இன்று காலை முத்துசாமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீசப்பட்ட இரு பாட்டில்களும் சாதாரணமான மதுபாட்டில்கள் தான் என்றும் கார் கண்ணாடியை உடைக்க மர்ம நபர்கள் முயற்றுள்ளதாக முத்துசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள குனியமுத்தூர் போலீசார் மதுபாட்டில்கள் வீசிய சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக பிரமுகர் வீட்டில் பாட்டில்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...