நீலகிரியில் தேயிலைத் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - 12 பேர் படுகாயம்

நீலகிரியில் தேயிலைத் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.


நீலகிரி: நீலகிரியில் தேயிலைத் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர். 



கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரத்தில் இருந்து பெரிய சோலை என்னும் இடத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்கு 17 பெண்களை ஆண்கள் சிலர் தனியார் வேன் ஒன்றில் வேலைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது, வழியில் ஐந்தாவது முடக்கு எனும் பகுதியில் வளைவான இடத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, அனைவரும் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்த 12 பெண்களில் காளியம்மாள் மற்றும் சுனிதா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் கேரளா மற்றும் ஊட்டியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 



ஓவேலி பகுதியில் உள்ள மிகப்பெரிய தேயிலைத் தோட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த சுமார் 400 தற்காலிக தொழிலாளர்களை அந்த நிறுவனம் கடந்த மாதம் வேலையிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அவதியுறும் தொழிலாளர்கள் வேலைக்காக சிறிய தனியார் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். 

இந்த நிலையில், பிக்கப் வேனில் சென்ற போது இதுபோன்ற விபத்து ஏற்பட்டு பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்து உள்ளனர். தோட்ட நிறுவனம் தற்காலிக தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவர்களுக்கு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...