கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் மாலை நேரங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் மாலை நேரங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் கேரளா காடுகளை ஒட்டிய பகுதியாக உள்ளதால் இங்கு பருவமழை காலங்களில் மழைப்பொழிவு சற்று கூடுதலாக இருக்கும்.
இருப்பினும் இந்த முறை தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் மழைப்பொழிவு என்பது முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு மழைப்பொழிவு பொய்த்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இடைவிடாது பெய்து வருகிறது.
குறிப்பாக, மாலை நேரங்களில் பெய்ய துவங்கும் மழையானது இரண்டு முதல் நான்கு மணி நேரம் இடைவிடாது சூறாவளிக்காற்று இல்லாமல் மிதமான மழையாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஒருமாத காலமாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியாகவும் கேரளா காடுகளை ஒட்டிய பகுதியாக உள்ளதால் இங்கு பருவமழை காலங்களில் மழைப்பொழிவு சற்று கூடுதலாக இருக்கும்.
இருப்பினும் இந்த முறை தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் மழைப்பொழிவு என்பது முற்றிலும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு மழைப்பொழிவு பொய்த்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இடைவிடாது பெய்து வருகிறது.
குறிப்பாக, மாலை நேரங்களில் பெய்ய துவங்கும் மழையானது இரண்டு முதல் நான்கு மணி நேரம் இடைவிடாது சூறாவளிக்காற்று இல்லாமல் மிதமான மழையாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஒருமாத காலமாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழையால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.