கோவை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து வால்பாறை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கோவை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து வால்பாறை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, வால்பாறை பகுதியிலுள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் பெட்டிக்கடைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பேருந்துகள், டாக்சிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, வால்பாறை பகுதியிலுள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் பெட்டிக்கடைகள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பேருந்துகள், டாக்சிகள் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர்.