கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை: சிறுமுகை பவானி நீர் தேக்க வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பெண் காட்டுயானை உயிரிழந்ததையடுத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மூலையூர் சராகத்திலிருந்து, பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பவானி அணையின் நீர் தேக்க பகுதியான மயில் மொக்கை சராக பகுதியில், துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த பகுதிகளில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அங்கு அழுகிய நிலையில் பெண் காட்டுயானை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில் , நிகழ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், தலைமையிலான மருத்துவக்குழுவினர் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு நடத்தினர். அதில், உயிரிழந்த யானை பெண் யானை என்றும் , இறந்து 8 முதல் 10 நாட்கள் ஆனதால் உடல் பாகம் முற்றிலும் அழுகி சிதைந்து காணப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் உடல் நலக்குறைவால் யானை உயிரிழந்திருக்க நேரிடும் என தெரிவித்த மருத்துவக்குழுவினர், அதன் உடலின் சில பாகங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். பின்னர் மீதமிருந்த யானையின் உடலை பிற ஊண் உண்ணிகளுக்காக அப்படியே வனத்தினுள் வனத்துறையினர் விட்டு வந்தனர்.