கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 பேருக்கும், அண்ணா மார்க்கேட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த தெலுங்குபாளையத்தை சேர்ந்த 3 பேருக்கும், கோட்டூரை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அடுத்து, கஞ்சிக்கோனம்பாளையம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கும், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தோகாவில் இருந்து விமானத்தில் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து விமானத்தில் வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
பூங்கா நகர் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், நெய்வேலியில் இருந்து வந்த வடமதுரை பகுதியை சேர்ந்த 45 வயது ஆணிற்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆர்.எஸ்.புரம், பெரியகடை வீதி, மக்கினாம்பட்டி, பேரூர், சேடர்பாளையம், பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.