கோவை: சாத்தான்குளத்தில் ஊரடங்கினை மீறி கடை செயல்பட்டதாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிராக நாளை கோவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் என கோவை மாவட்ட ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி சங்கங்கள் அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
கோவை: சாத்தான்குளத்தில் ஊரடங்கினை மீறி கடை செயல்பட்டதாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிராக நாளை கோவையில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்படும் என கோவை மாவட்ட ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி சங்கங்கள் அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கினை மீறி கடைகள் திறந்து வைக்கப்பட்டதாக, தந்தை ஜெயராஜ், மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு வணிகர் சங்கங்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் அனைத்தும் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்காது என கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட பேக்கரி சங்கத்தின் தலைவர் அரோமா பொன்னுசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ஊரடங்கினை மீறி கடைகள் திறந்து வைக்கப்பட்டதாக, தந்தை ஜெயராஜ், மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியதோடு வணிகர் சங்கங்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் அனைத்தும் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்காது என கோவை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட பேக்கரி சங்கத்தின் தலைவர் அரோமா பொன்னுசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.