கோவை: கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கோவை: கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, அமைச்சர் எஸ் பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, வி.பி கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரூ.238.40 கோடியில் நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.